அக்.4, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சிறப்பு செபம்
செப்.12,2014. வருகிற அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடக்கும் குடும்பம் பற்றிய
உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்துக்காக, அக்டோபர் 4ம் தேதி சனிக்கிழமையன்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சிறப்பு செபம் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய ஆயர் பேரவை ஏற்பாடு செய்துள்ள இச்செப வழிபாட்டில்
உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள். இச்செபம் அக்டோபர்
4ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 7.30 வரை நடக்கும். குடும்பத்திற்கு நற்செய்தி
அறிவிக்கும் சூழலில் எதிர்கொள்ளப்படும் மேய்ப்புப்பணி சவால்கள் என்ற தலைப்பில் வருகிற
அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் நடைபெறும்.