2014-09-11 16:42:01

வருகிற நவம்பரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.11,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Strasburgல் இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு வருகிற நவம்பரில் சென்று உரையாற்றுவார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இவ்வியாழனன்று அறிவித்தார்.
ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schulz அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது விடுத்த அழைப்பின்பேரில், ஐரோப்பிய பாராளுமன்றம் சென்று உரையாற்றவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நிகழ்வு 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி இடம்பெறும் என அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.
1988ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றம் சென்றதன் நினைவாக, கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Schulz. அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.