பத்திரிகையாளர் Steven Sotloff குடும்பத்திற்கு திருத்தந்தை ஆறுதல் தந்தி
செப்.09,2014. சிரியாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பத்திரிகையாளர் Steven Sotloff அவர்கள்
கொலைசெய்யப்பட்டுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அதேவேளை, எல்லா இடங்களிலும் மக்கள்
வன்முறை, பகைமை மற்றும் கருணையின்மையைப் புறக்கணித்து வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். உலகினர் ஒவ்வொருவரும் மன்னிப்பு, குணப்படுத்தல் மற்றும்
அமைதிக்காக உழைக்கவும், இதற்காகச் செபிக்கவும் கேட்டுள்ள திருத்தந்தை, பத்திரிகையாளர்
Steven அவர்களின் பிரிவால் வருந்தும் ஒவ்வொருவருக்கும் இறைவனின் ஆறுதலையும் வலிமையையும்
இறைஞ்சுவதாகவும் கூறியுள்ளார். Steven Sotloff அவர்களின் குடும்பத்தினருக்கு, திருத்தந்தையின்
பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச்
செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிரியாவின் வட பகுதியில் ஓராண்டுக்கு முன்னர்
கடத்தப்பட்ட அமெரிக்க ஃபீரிலான்ஸ் பத்திரிகையாளரான Steven Sotloff அவர்கள், கடந்த வாரத்தில்
ஐஎஸ் இஸ்லாம் நாட்டின் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டார்.