2014-09-09 16:22:40

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட அ.பணி பிரேம் குமார் சே.ச. பாதுகாப்பாக இருக்கிறார்


செப்.09,2014. ஆப்கானிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில் அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்தப்பட்ட தமிழக இயேசு சபை அருள்பணியாளர் பிரேம் குமார் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.
இயேசு சபை அகதிப்பணியின் ஆப்கான் கிளைப் பொறுப்பாளரான அருள்பணியாளர் பிரேம் குமார், கடந்த ஜூன் 2ம் தேதி, அந்நாட்டின் ஹெராட் மாநிலத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டார்.
மேலும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அருள்பணியாளர் பிரேம் குமார் அவர்கள் எவ்விதக் காயமுமின்றி பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்று ஏற்கனவே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.