2014-09-06 16:00:17

செப்.28, 3வது சிறப்பு ஆயர் மாமன்றத்திற்காகச் செபிக்கும் நாள்


செப்.06,2014. வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை வத்திக்கானில் இடம்பெறும் 3வது சிறப்பு ஆயர் மாமன்றத்திற்காகச் சிறப்பாகச் செபிப்பதற்கென ஒரு செப நாளை அறிவித்துள்ளது உலக ஆயர் மாமன்றச் செயலகம்.
“குடும்பத்திற்கு நற்செய்தி அறிவிப்பதில் எதிர்நோக்கப்படும் மேய்ப்புப்பணி சவால்கள்” என்பது குறித்து நடக்கவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்காக, இம்மாதம் 28ம் தேதி ஞாயிறன்று சிறப்பாகச் செபிக்குமாறு உலகின் அனைத்துத் தலத்திருஅவைகள், பங்குகள், துறவற நிறுவனங்கள், பக்த சபைகள், பக்த இயக்கங்கள் ஆகிய அனைத்தையும் கேட்டுள்ளது உலக ஆயர் மாமன்றச் செயலகம்.
சிறப்பு ஆயர் மாமன்றம் நடக்கும் நாள்கள் மற்றும் அம்மன்றம் நடப்பதற்கு முந்தைய நாள்களிலும் சிறப்பாகச் செபிக்குமாறு மேலும் கேட்டுள்ளது உலக ஆயர் மாமன்றச் செயலகம்.
ஒவ்வொரு நாளும் உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் இக்கருத்துக்காகச் சிறப்பான செபங்கள் இடம்பெறுகின்றன எனவும் அச்செயலகம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.