'படைப்பின் காலம்' என்ற நிகழ்வு - கிறிஸ்தவ சபைகளின் இணைந்த
முயற்சி
செப்.03,2014. பிரித்தானியாவிலும், அயர்லாந்திலும் உள்ள கத்தோலிக்கத் திருஅவை, ஏனையக்
கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து, செப்டம்பர் 1, இத்திங்கள் முதல் 'படைப்பின் காலம்' என்ற
மாத நிகழ்வொன்றைத் துவக்கியுள்ளது. படைப்பை, குறிப்பாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க
வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்க, 1989ம் ஆண்டு முதல் துவக்கப்பட்ட இந்த முயற்சி,
இவ்வாண்டு தன் வெள்ளிவிழாவைச் சிறப்பிக்கிறது. ஆர்த்தடாக்ஸ் சபையினரின் புத்தாண்டு
நாளெனக் கருதப்படும் செப்டம்பர் 1ம் தேதி முதல், படைப்பின் காவலர் என்று கருதப்படும்
அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளான அக்டோபர் 4ம் தேதி முடிய 'படைப்பின்
காலம்' என்ற இந்த மாதம் கடைபிடிக்கப்படுகிறது. படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவும்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தவும் ஊர்வலங்கள், கண்காட்சிகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு
செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.