ஒடிஸ்ஸா வெள்ள துயர்துடைப்புப் பணிகளுக்கு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் விண்ணப்பம்
செப்.02,2014. ஒடிஸ்ஸாவில் அண்மைய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கென
அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு 10 இலட்சம் டாலர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது. பல
இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புக்களை இழந்துள்ளதாகவும், அவர்கள் உடைமைகள்
அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், வருங்காலம் குறித்த அச்சத்துடனேயே அவர்கள் வாழ்வதாகவும்
அறிவித்தார், இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி, Thangsha Sebastian அவர்கள். ஒடிஸ்ஸாவின்
அண்மைய வெள்ளப்பெருக்கால், 23 மாவட்டங்களில் 3990 கிராமங்களைச் சார்ந்த ஏறத்தாழ 17 இலட்சத்து
80 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.