2014-09-02 15:47:58

உத்திரப்பிரதேசத்தில் கிறிஸ்தவக் கோவிலை ஆக்ரமித்தோர் கைது


செப்.02,2014. உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிறிஸ்தவக் கோவிலை ஆக்ரமித்து அதனை இந்து கோவிலாக மாற்றியக் குற்றத்திற்காக பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 11பேரைக் கைதுச் செய்துள்ளது அம்மாநிலக் காவல்துறை.
இராஷ்டிரிய சுவயம்சேவாக், பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த இந்து தீவிரவாதிகள், உத்தரபிரதேசத்தின் Asroi எனுமிடத்தில் உள்ள கிறிஸ்தவக்கோவிலை ஆக்ரமித்து அங்குள்ள சிலுவைகளையும் ஏனைய வழிபாட்டுப் பொருட்களையும் அகற்றி, கோவிலுக்குள் ஹோமம் வளர்த்து அதனை இந்து கோவிலாக அறிவித்தனர்.
தற்போது இந்த கோவில் கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளபோதிலும், சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உத்திரப்பிரதேசத்தில் தொடர்வதாக அங்குள்ள கிறிஸ்தவர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.