2014-09-01 15:03:22

பிலிப்பீன்ஸில் நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுடன் திருத்தந்தை உணவருந்துவார்


செப்.01,2014. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் உயிர்பிழைத்த மக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் தான் மேற்கொள்ளும் திருப்பயணத்தின்போது உணவருந்துவார் என பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
வரும் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இலங்கைத் திருப்பயணத்தைத் தொடர்ந்து பிலிப்பீன்ஸில் திருப்பயணம் மேற்கொள்ளும்போது இம்மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்துவார் என்றார் Tagbilaran மறைமாவட்ட ஆயர் Leonardo Medroso .
வெள்ளப்பெருக்கு மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 30 பேருடன், ஜனவரி மாதம் 17ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணவருந்துவார் என ஏற்கனவே Palu பேராயர் John Du அறிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி 15 முதல் 19 வரை பிலிப்பீன்ஸில் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.