வன்முறைகள் நிறுத்தப்பட இந்தியக் கிறிஸ்தவ சபைகள் அழைப்பு
ஆக.30,2014. இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து மாநிலங்களின் எல்லைப்பகுதியில் 12
பேர்களின் உயிரிழப்புக்குக் காரணமான வன்முறைகள் நிறுத்தப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகள்
துவக்கப்படவேண்டும் என வடகிழக்கு இந்திய கிறிஸ்தவ சபை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் இணைந்து ஷில்லாங்கில் நடத்தியக் கூட்டத்தில்
இவ்வழைப்பை விடுத்த கிறிஸ்தவப் பிரதிநிதிகள், ஒருவர் தான் வாழ்வதோடு பிறரையும் வாழவைக்கவேண்டும்
என்ற கொள்கையுடன் அனைத்து அமைதி முயற்சிகளும் இடம்பெறவேண்டும் என்றனர். அஸ்ஸாம் மற்றும்
நாகலாந்து எல்லையில் இடம்பெற்ற அன்மை வன்முறைகளால், 10,000 பேர் குடிபெயர்ந்துள்ளதைச்
சுட்டிக்காட்டும் கிறிஸ்தவத் தலைவர்கள், இவர்களை மீள்குடியேற்றுவது, அமைதித் திட்டத்தின்
முதல்படியாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.