2014-08-30 16:47:52

திருத்தந்தை : இறைவன் நம்மை மன்னிப்பதற்கு நம் ஒத்துழைப்பை வழங்குவோம்


ஆக.30,2014. 'இறைவன் நம்மை எப்போதும் மன்னிப்பதோடு, நம் அருகே நடந்தும் வருகிறார்; அவ்விதம் அவர் நடந்துவருவதற்கு நாம் அவரை அனுமதிக்கவேண்டும்' என்று இச்சனிக்கிழமை தன் Twitter பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் Twitter செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை மன்னிப்பதற்கும், நம்முடனேயே இறைவன் நடந்து வருவதற்கும் நாம் அவருக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்பைக் குறித்து இச்சனிக்கிழமை Twitter வழியே நம்மிடம் விண்ணப்பித்துள்ளார்.
திருத்தந்தையின் Twitter செய்தியை ஒவ்வொருநாளும் ஏறத்தாழ 44 இலட்சம் பேர் வாசித்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.