பழங்குடியினர் மத்தியில் திருஅவை செய்துவரும் பணிகள் போற்றுதற்குரியன - இந்தியக் குடியரசுத்
தலைவர்
ஆக.27,2014. மேற்கு வங்காளத்தில் வாழும் பழங்குடியினர் மத்தியில் கத்தோலிக்கத் திருஅவை
செய்துவரும் பணிகள் போற்றுதற்குரியன என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
அவர்கள் கூறினார். மேற்கு வங்காளத்தில் உள்ள Palsanda எனுமிடத்தில் Daya Duar என்ற
மருத்துவமனையின் அடிக்கல்லை அண்மையில் நாட்டிய குடியரசுத் தலைவர் முகர்ஜி அவர்கள், திருஅவையின்
பணிகளால், பழங்குடி மக்களிடையே நிலவி வந்த குழந்தைப் பேறு கால துன்பங்கள் நீங்கியுள்ளன
என்று குறிப்பிட்டார். பழங்குடி மக்களின் முழுமையான முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள
கிறிஸ்தவப் பணியாளர்களின் சேவை போற்றுதற்குரியது என்று குறிப்பிட்ட முகர்ஜி அவர்கள்,
'இறைவனின் சேவை, மக்களின் சேவை' என்பதை கிறிஸ்தவர்கள் உலகறியச் செய்து வருகின்றனர் என்று
கூறினார். பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை இழக்கும் ஆபத்து நாடெங்கும் நிலவிவருகிறது
என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய முகர்ஜி அவர்கள், இந்த அநீதியைத் தட்டிக் கேட்பதிலும்
கிறிஸ்தவர்கள் காட்டும் அக்கறையை அனைவரும் பின்பற்றினால் நாடு இன்னும் செழிப்புறும் என்று
கூறினார்.