ஆக.26,2014. 'இறைவனின் அன்பு அளவிடமுடியாதது, அதற்கு எல்லைகளே இல்லை' என இச்செவ்வாயன்று
தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இறையன்பு அனைத்து
எல்லைகளையும் அளவுகோல்களையும் தாண்டியது என எடுத்துரைக்கிறது திருத்தந்தையின் டுவிட்டர்
செய்தி இத்தாலியம், ஆங்கிலம், அரேபியம் உட்பட, ஒன்பது மொழிகளில் திருத்தந்தை ஒவ்வொரு
நாளும் வெளியிட்டு வரும் டுவிட்டர் செய்திகளை, உலகெங்கும் 44 இலட்சம் பேர் பின்பற்றி
வருகின்றனர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.