திருத்தந்தை : ஒன்றிப்பை நோக்கியப் பாதையில் நற்செய்தியின் சான்றுகளாக கிறிஸ்தவர்கள்
ஆக.25,2014. இத்தாலியின் டூரின் பகுதியில் இடம்பெறும் மெத்தடிஸ்ட் மற்றும் வல்தேஸ் கிறிஸ்தவசபைகளின்
மாமன்றக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். திருத்தந்தையின்
பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இந்த தந்திச்
செய்தி, திருத்தந்தையின் ஆன்மீக அருகாமையையும் சகோதரத்துவ வாழ்த்தையும் தெரிவிக்கிறது.
கிறிஸ்தவர்கள் அனைவரும் முழுமையான ஒன்றிப்பை நோக்கியப் பாதையில் இயேசுவின் சாட்சிகளாக
விளங்கி, ஒவ்வொருவருக்கும் நற்செய்தியின் பலத்தையும் ஒளியையும் வழங்க இறைவன் உதவுவாராக
என, தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.