அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஈராக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் உடைக்க முடியாதது
ஆக.23,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறி, கடும்
துன்பங்களை எதிர்கொள்கின்றபோதிலும், அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தளர்ச்சியடையவில்லை
என்று, குர்திஸ்தான் சென்று திரும்பியுள்ள கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம் ஒன்று கூறியது. குர்திஸ்தானில்
அகதிகளாக வாழும் கிறிஸ்தவர்களைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ள Aid to the Church in
Need கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்தின் Maria Lozano, இவ்வாறு கூறினார். ஐஎஸ்ஐஎஸ்
இஸ்லாம் தீவிரவாதிகளின் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஈராக் கிறிஸ்தவர்கள்,
தங்களை கிறிஸ்தவர்கள் என அடையாளம் காட்டும் சிலுவைகள், செபமாலைகள் அல்லது புனிதர்களின்
மெடல்களைத் தங்கள் கழுத்துக்களில் அணிந்துள்ளனர் எனக் கூறினார் Lozano. கடும் இன்னல்களுக்கு
மத்தியிலும், ஈராக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் உடைக்க முடியாதது என்றும் Lozano கூறினார்.