இந்திய விவசாயிகள் மேம்பட்ட முறைகளைக் கையாள வேண்டும், ஐ.நா.
ஆக.22,2014. இந்திய விவசாயிகள் தங்களின் தொழில்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது சென்னையில் நடைபெற்ற
ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டாப் பகுதியில்
இருக்கும் விவசாயிகளும் இந்தக் கருத்தரங்கில் பங்குபெற்றுள்ளனர். விவசாய நிலங்கள்
குறைந்து வருவது, பருவமழை உரிய நேரத்தில், சரியான அளவில் பெய்யாமல் போவது ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு,
மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்முறைகளை இந்திய விவசாயிகள் கையாள வேண்டும்
என்று இந்த பன்னாட்டு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த நிலத்தில், மேம்பட்ட
தொழில்நுட்பம்மூலம், கூடுதல் உற்பத்திகளைப் பெற விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள்,
போதிய அளவில் நிதியுதவியையும், தொழில்நுட்பப் பயிற்சிகளையும் அளித்து உதவ வேண்டும் எனவும்
இந்த மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.