2014-08-21 17:11:17

திருத்தந்தை : இயேசுவை நம் ஒரே வழியாகக் கண்டுகொள்வதால் பிறக்கும் மகிழ்ச்சி நம்மைச் சான்று பகரும் வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது


ஆக.21,2014. இயேசுவே நம் ஒரே வழி என்பதைக் கண்டுகொள்வதால் பிறக்கும் மகிழ்ச்சி நம்மை, சான்று பகரும் வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாசரேத்தின் பிறரன்பு பணிக்குழு அங்கத்தினர்களை இப்புதனன்று மாலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதகுலத்தின் ஒரே வழியாக இயேசுவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அந்த வழி நம்மை தந்தையாம் இறைவனை நோக்கி அழைத்துச் செல்கிறது, இதற்காகவே இயேசு சிலுவையில் உயிர் துறந்தார் என்றார்.
இந்த வழியைக் கண்டுகொள்ளும்போது அதனால் மகிழ்ச்சி பிறக்கிறது, நாமும் இயேசுவின் வாழ்வில் புகுகிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்மிடமிருந்து பறிக்க முடியாத இந்த மகிழ்ச்சி வழி, நாம் சான்று பகர்பவர்களாக மாறுகிறோம், அதனால் மறைப்பணியைத் தொடர்கிறோம் என நாசரேத்தின் பிறரன்பு பணிக்குழுவிடம் மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.