ஈராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் கர்தினால் Beshara al-Rahi அவர்கள்
ஒருநாள் பயணம்
ஆக.20,2014. ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பகுதி தலைநகரான எர்பிலில் மாரனைட் வழிபாட்டுமுறை
கர்தினால் Beshara al-Rahi அவர்கள் இப்புதனன்று ஒருநாள் பயணம் மேற்கொண்டார். மேல்கத்திய
கிரேக்க கத்தோலிக்க முதுபெரும்தந்தை, மூன்றாம் கிரகோரியஸ் லஹாம் அவர்களுடன் கர்தினால்
Beshara al-Rahi அவர்கள், குர்திஸ்தான் பகுதியின் தலைவர், Massoud Barzani அவர்களைச்
சந்தித்தார். நினிவே சமவெளியிலிருந்து விரட்டப்பட்டுள்ள 1,20,000 கிறிஸ்தவர்களைச்
சந்திப்பது, கர்தினால் Beshara al-Rahi அவர்களின் முக்கிய நோக்கம் என்று ஆசியச் செய்திக்குறிப்பொன்று
கூறுகிறது. திருத்தந்தையின் சார்பில் ஈராக் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள
கர்தினால் Fernando Filoni அவர்களுடன் கர்தினால் Beshara al-Rahi அவர்கள் தொலைப்பேசித்
தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.