2014-08-19 15:46:43

"சுற்றுச்சூழல் நீதி" ஞாயிறு


ஆக.19,2014. இந்தியாவில், ஆகஸ்ட் 17, கடந்த ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட நீதி ஞாயிறன்று சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்திய ஆயர்களால் 1983ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நீதி ஞாயிறு, நீதி குறித்த விவகாரங்களுக்கு, தனியாள்களும், நிறுவனங்களும் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்து வரும் ஞாயிறு, நீதி ஞாயிறாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டின் இஞ்ஞாயிறு, "சுற்றுச்சூழல் நீதி" என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதராம் : CBCI







All the contents on this site are copyrighted ©.