ஆக.18,2014. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய இராணுவத்தால் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட
பெண்கள் குழு ஒன்றை, இத்திங்கள் திருப்பலிக்கு முன்னர் முன்னர் சந்தித்து ஆசீர்வதித்து
ஆறுதல் சொன்னார் திருத்தந்தை. செயோல் அமலமரி பேராலயத்துக்கு முன்னர் காத்திருந்த இந்த
7 பெண்களில் ஏறக்குறைய எல்லாருமே சக்கர நாற்காலியில் இருந்தனர். இப்பெண்களில் ஒருவர்
கொடுத்த குண்டூசி ஒன்றை இத்திருப்பலியின் இறுதிவரை தனது உடுப்பில் குத்தியிருந்தார் திருத்தந்தை.
இச்சந்திப்புக்கு முன்னர் AP ஊடகத்திடம் பேசிய 86 வயது Lee Yong-soo என்ற பெண், தாங்கள்
பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், இன்னும்
அந்த வேதனையால் துன்புறும் தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு இச்சந்திப்பு ஆறுதலாக இருக்கும்
என்று கூறினார்.