2014-08-18 15:38:46

திருத்தந்தையின் டுவிட்டர்


ஆக.18,2014. “கிறிஸ்துவின் சிலுவையின் வல்லமையில் நம்பிக்கை வைத்து அவரின் ஒப்புரவு அருளைப் பெற்று அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம்”; “ஈராக்கில் பல அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர், அவர்கள் விரைவில் தங்கள் இல்லம் திரும்ப ஆண்டவரிடம் செபிப்போம்” ஆகிய இரண்டு டுவிட்டர் செய்திகளை இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். தென் கொரியத் திருப்பயணத்தின் நிறைவு நாளான இத்திங்களன்று இவ்விரு கொரிய நாடுகளுக்கிடையே அமைதியும் ஒப்புரவும் ஏற்பட வேண்டுமெனச் செபிப்பதற்கே அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.