2014-08-17 13:57:21

திருத்தந்தையின் ஞாயிறு டுவிட்டர் செய்திகள்


ஆக.17,2014. “திருஅவை மேலும் மேலும் புனிதத்திலும், தாழ்மையிலும் வளரவும், ஏழைகள், தனிமையில் இருப்போர், நோயாளிகள் ஆகியோருக்குப் பணிபுரிந்து இறைவனை அன்புகூரவும் செபிப்போம். இறைவனின் கருணையால் நாம் மீட்கப்பட்டுள்ளோம், இந்த மகிழ்வான செய்தியைப் பரப்புவதில் நாம் ஒருபோதும் சோர்வடையாதிருப்போம், இவ்வளவு வன்முறைகள் இடம்பெறும் ஈராக் நாட்டுக்காகச் செபிப்போம்” என்ற மூன்று செய்திகளை தனது டுவிட்டர் பக்கத்தில் இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.