ஆகஸ்ட் 15, திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மூவேளை செப உரை
ஆக.15,2014. வானக அரசியான மரியாவிடம் நமது அனைத்து மகிழ்வையும் துன்பங்களையும் நம் நம்பிக்கைகளையும்
மீண்டும் அர்ப்பணிப்போம். செ வோல் படகு விபத்தில் தங்கள் வாழ்வை இழந்தவர்கள், இந்தப்
பெரிய தேசியப் பேரிடரால் தொடர்ந்து பாதிக்கப்படும் அனைவரையும் அன்னைமரியிடம் அர்ப்பணிக்கின்றேன்.
இவர்களுக்கு இறைவன் நிறை சாந்தியை அளிப்பாராக. இந்த விபத்தானது, அனைத்துக் கொரிய மக்களையும்
ஒருமைப்பாட்டுணர்வுடன் பொது நலனுக்காகத் தங்களை அர்ப்பணிக்கத் தூண்டுவதாக. நம் மத்தியிலுள்ள
துன்புறுவோர், குறிப்பாக, நோயாளிகள், மற்றும் மாண்புடைய வேலையில்லாமல் இருப்போர் அனைவருக்கும்
அன்னைமரியா கருணை காட்டுவாராக. கொரிய மக்கள் இந்நாளில் தங்களின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
இந்தச் சிறந்த நாட்டையும், அதன் மக்களையும் அன்னைமரியா பாதுகாக்குமாறு செபிப்போம். ஆசியா
முழுவதிலுமிருந்து வந்துள்ள அனைத்து இளையோரையும் அன்னைமரியாவின் பாதுகாப்பில் வைப்போம்.
அவர்கள், இறைவன் திட்டத்துக்கு ஏற்ற வகையில் உலக அமைதியின் விடியலின் மகிழ்வான அறிவிப்பாளர்களாக
இருப்பார்களாக