அன்பு நேயர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு
தென் கொரியாவுக்கான தனது 5 நாள் திருப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதனால் இப்புதன் பொது
மறையுரை இடம்பெறவில்லை. மேலும், ஆறாவது ஆசிய இளையோர் தினத்தில் கலந்து கொள்ளல், 124 கொரிய
மறைசாட்சிகளை அருளாளர் நிலைக்கு உயர்த்துதல் ஆகியவை திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின்
முக்கிய நோக்கங்களாகும். தென் கொரியாவின் தெஜோன் மறைமாவட்டத்தில் இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள
ஆறாவது ஆசிய இளையோர் தினத்தில், தமிழகத்தின் இளையோர் பிரதிநிதியாக இராபர்ட் நரேஷ் கலந்துகொள்கிறார்.
தென் கொரியாவிலிருந்து இராபர்ட் நரேஷ் அவர்கள் வத்திக்கான் வானொலியில் திருத்தந்தையின்
திருப்பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார் ஆகஸ்ட் 18, வருகிற
திங்களன்று நிறைவடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தென் கொரியத் திருப்பயணம் சிறப்புற
அமையச் செபிப்போம்.