2014-08-12 15:27:19

வறியப் பகுதிகளுக்கு உதவும் அர்ஜென்டீனா திருஅவைக்கு திருத்தந்தை பாராட்டு


ஆக.12,2014. அதிக உதவி தேவைப்படும் பகுதிகளுக்கு உதவி என்ற நோக்குடன் அர்ஜென்டீனா ஆயர்கள் நடத்திவரும் நிதி திரட்டலுக்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வோர் ஆண்டும் அர்ஜென்டீனாவின் கத்தோலிக்கர்கள் ஒன்றுகூடி, அந்நாட்டின் ஏழ்மைப் பகுதிகளுக்கு உதவிகளை வழங்கும் இந்தப் பழக்கம் குறித்து திருத்தந்தையின் வாழ்த்துக்களையும் ஆசீரையும் தெரிவிக்கும் இச்செய்தி, தாராள மனதுடன் சுயநலமின்றி செயல்படும் மக்களைப் பாராட்டியுள்ளது.
தங்கள் விசுவாச சாட்சியம் மூலமும், சகோதரத்துவ அன்பு, ஒருமைப்பாடு, பகிர்வு ஆகியவை மூலமும் ஏழைகளில் இயேசுவைக் கண்டு, இவ்வுலகின் உப்பாகவும் ஒளியாகவும் செயல்பட கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என அர்ஜென்டீனா திருஅவைக்கான திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
இச்செய்தியை திருத்தந்தையின் பெயரால் அர்ஜென்டீனா நாட்டிற்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான வானொலி








All the contents on this site are copyrighted ©.