2014-08-12 15:36:14

ஈராக் கிறிஸ்தவர்களுக்கென கத்தோலிக்க அமைப்புகளின் நிதியுதவி


ஆக.12,2014. ஈராக்கில் தங்கள் பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கில் 25,000 பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின் கத்தோலிக்க உதவி அமைப்பான CAFOD.
சிரியாவிலிருந்து வெளியேறி வட ஈராக்கில் அடைக்கலம் தேடியுள்ள அகதிகளிடையேயும், லெபனனில் அடைக்கலம் தேடும் ஈராக் கிறிஸ்தவர்களிடையேயும் கடந்த சில மாதங்களாக பணியாற்றிவரும் CAFOD அமைப்பு, தற்போது ஈராக்கிற்குள் பணியாற்றும் கிறிஸ்தவ உதவி நிறுவனங்களுக்கு நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதற்கிடையே, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் கத்தோலிக்க அமைப்பு ஒன்று ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஈராக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
Aid to the Church in Need என்ற இந்த அமைப்பு ஏற்கனவே ஜூன் மாதத்திலும் பெரிய அளவிலான நிதியுதவியை வழங்கியுள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.