2014-08-09 14:40:23

ஈராக் கிறிஸ்தவர்களுக்காகச் சிறப்பு செபங்களை எழுப்புமாறு திருத்தந்தை வேண்டுகோள்


ஆக.09,2014. உலகின் அனைத்துக் கத்தோலிக்கரும், கத்தோலிக்கப் பங்குத்தளங்களும் ஈராக் கிறிஸ்தவர்களுக்காகச் சிறப்பு செபங்களை எழுப்புமாறு இவ்வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஈராக் கிறிஸ்தவர்கள், ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடும் நெருக்கடிகளில் வாழ்ந்துவரும் இந்நாள்களில், இக்கிறிஸ்தவர்களுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு விண்ணப்பிக்கும் குறுஞ்செய்திகளை, இவ்வெள்ளிக்கிழமை நண்பகலுக்குப் பின்னர் மட்டும் நான்கு தடவைகள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நன்மனம் கொண்ட அனைவரும் தன்னோடு இணைந்து ஈராக் கிறிஸ்தவர்கள் மற்றும் வேதனைப்படும் அனைத்து மக்களுக்காகவும் செபிக்குமாறு கேட்டுள்ளர் திருத்தந்தை.
தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இக்கிறிஸ்தவர்கள், அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளனர், இவர்களுக்காகச் செபிப்போம் எனவும் தனது டுவிட்டர் செய்திகளில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.