2014-08-08 16:00:20

பெருகி வரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து டெல்லி பேராயர் கவலை


ஆக.08,2014. வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாதப் பிரச்சனைகள் அதிகரித்துவருவது குறித்தும் நாட்டின் தலைநகரிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கிறிஸ்தவர்களும், திருஅவைச் சொத்துக்களும் தாக்கப்பட்டு வருவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார் டெல்லி பேராயர் அனில் கூட்டோ.
ஹரியானா மாநிலத்தின் ரோடக் நகரில் உயர்மறைமாவட்ட ஆலயத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பள்ளிப் பேருந்துகளை இனம்தெரியாத ஆள்கள் இப்புதனன்று சேதப்படுத்தியுள்ளதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள பேராயர் அனில் கூட்டோ அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
கிறிஸ்தவப் போதகர்களும், செபக் குழுக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி கவலை தருகின்றது எனவும் பேராயர் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.