2014-08-07 14:28:14

நேர்காணல் – இயேசு சபை மறுபிறவி எடுத்ததன் 200வது ஆண்டு


ஆக.07,2014. இயேசு சபை அருள்பணியாளர் மைக்கிள் ஆலோசனை அவர்கள், இயேசு சபையில் இறுதி நிலை பயிற்சியில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளராக இருந்து பயிற்சி கொடுத்து வருபவர். இதற்கு முன்னர் இவர் இயேசு சபையில் மதுரை மாநில நவதுறவியர் பயிற்சியாளர் உட்பட பல முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். 18ம் நூற்றாண்டில் இயேசு சபை முடக்கப்பட்டு, அச்சபை மீண்டும் மறுப்பிறப்படைந்ததன் 200வது ஆண்டு இவ்வாண்டில் உலகெங்கும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இயேசு சபை மீதான தடை நீக்கப்பட்டு அச்சபை மீண்டும் மறைப்பணியாற்றுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட 200வது ஆண்டு நிறைவு ஆகஸ்ட் 7 இவ்வியாழனன்று நினைவுகூரப்பட்டது. 1814ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி இவ்வொப்புதலை திருத்தந்தை 7ம் பத்திநாதர் அவர்கள் வழங்கினார். இந்த 200வது ஆண்டுக் கொண்டாட்டம் பற்றி இன்று பேசுகிறார் அருள்பணி மைக்கிள் ஆலோசனை அவர்கள்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.