2014-08-06 15:51:54

கோவா மாநிலத்தில் சூதாட்ட விடுதிகள், மற்றும் 'மசாஜ்' மையங்களை அதிகரிக்கும் முயற்சிகளை எதிர்த்து தலத்திருஅவை


ஆக.06,2014. இந்தியாவின் கோவா மாநிலத்தின் சுற்றுலாத் துறை வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக, மாநிலத்தில் சூதாட்ட விடுதிகள், மற்றும் 'மசாஜ்' மையங்களை அதிகரிக்கும் முயற்சிகளை எதிர்த்து தலத்திருஅவை குரல் கொடுத்துள்ளது.
மாநிலத்தின் நிதி நிலையை வளர்ப்பதற்கு தீய வழிகளை அரசு மேற்கொள்வது சரியல்ல என்றும், இத்தகைய முயற்சிகள் மாநிலத்தின் பெயரைக் கெடுக்கும் என்றும், கோவா காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள் பணியாளர் Maverick Fernandes அவர்கள் கூறினார்.
மாநிலத்தில் ஏற்கனவே செயலாற்றிவரும் சூதாட்ட விடுதிகள் குற்றங்களை வளர்த்து வருகின்றன என்றும், 'மசாஜ்' மையங்கள், பல்வேறு பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அருள் பணியாளர் Fernandes அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தனியார் நிறுவனங்களை நம்பி மாநிலம் மேற்கொண்டுவரும் இந்த முயற்சிகளால், கோவா மாநிலம் விரைவில் தனியாரின் சொத்தாக மாறும் ஆபத்து உள்ளதென்றும் காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள் பணியாளர் Fernandes அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.