ஆக.04,2014. உலகிலேயே பாலர் தொழிலாளர்களை அதிகம் கொண்டிருக்கும் நாடாக இந்தியா இருப்பது
தேசிய அவமானம் என்று அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. புது டெல்லியில்
கடந்த வாரம் வெளியிடப்பட்ட CRY என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது ஒரு
கோடியே ஒரு இலட்சம் பாலர் தொழிலாளர்கள் உள்ளனர். 5 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட
சிறார்கள், வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் எவ்வித ஓய்வுமின்றி வேலை
செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் இந்த அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.