ஆக.04,2014. ஈராக்கின் மோசுல் நகரை ISIS என்ற இஸ்லாமிய தீவிரவாதக்குழு கைப்பற்றியபின்
அங்குள்ள 45 கிறிஸ்தவ நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன மற்றும் மசூதிகளாகவும் இஸ்லாமிய
அமைப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. மோசுல் நகர் புனித எஃப்ரேம் பேராலயத்திற்குள் நுழைந்த
இஸ்லாம் தீவிரவாதிகள் அங்குள்ள சிலுவையை அகற்றிவிட்டு, அவ்விடத்தில் தங்கள் கொடியை நாட்டியுள்ளனர். மோசுல்
நகரில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து சித்ரவதைச் செய்யப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும்,
வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டும் வருவதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் உரைக்கின்றன.