2014-08-02 15:16:31

சியெரா லியோனில் இபோலா நோயால் தாக்கப்பட்டவர்களுக்குத் தலத்திருஅவை பணி


ஆக.02,2014. சியெரா லியோனில் இபோலா நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும், அது குறித்த மக்களின் மூடநம்பிக்கையும் அதிகரித்துவரும்வேளை, திருஅவைப் பணியாளர்கள் மக்களிடமிருந்து பயத்தைப் போக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர் என்று தலைநகர் Freetown உயர்மறைமாநில காரித்தாஸ் இயக்குனர் அறிவித்தார்.
அதிக வீரியம்கொண்ட தொற்றுநோயான இபோலாவைத் தடுப்பதற்கு அந்நாட்டை முன்னின்று நடத்திவந்த மருத்துவர் Sheik Umar Khan அவர்கள் ஜூலை 29ம் தேதி இறந்ததையொட்டி நாட்டின் நிலைமை நம்பிக்கையிழந்த சூழலில் உள்ளதாக, CNS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் அருள்பணி Peter Konteh
கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இபோலா நோய்க் கிருமிகளின் பாதிப்பால் 729 பேர் இறந்துள்ளனர். இதனால் சியெரா லியோனில் ஜூலை 31ம் தேதி அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.