காசாப் பகுதி ஆக்ரமிக்கப்பட்ட ஒரு சிறைபோல் நடத்தப்பட்டால், அங்கு போர் நிறுத்தம் பலனற்றது,
முதுபெரும் தந்தை Twa
ஆக.02,2014. காசாப் பகுதி ஆக்ரமிக்கப்பட்ட ஒரு சிறைபோல் நடத்தப்பட்டால், அங்கு போர் நிறுத்தம்
பலனற்றது என, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் பீதெஸ்
செய்தி நிறுவனத்திடம் கூறினார். தாக்குதல்களின் பிடியிலுள்ள காசாப் பகுதியில் அச்சமும்
சோர்வுமே காணப்படுகின்றன, இவற்றால் வெறுப்புணர்வே வளர்ந்து வருகின்றது என்றுரைத்த முதுபெரும்
தந்தை Twal அவர்கள், பயங்கரவாதிகள் எதையும் செய்யத் தயாராகும் நிலைக்குஉதவும் நம்பிக்கையிழந்த
மக்களின் தொழிற்சாலையாக காசாப் பகுதி உள்ளது என்று கூறினார். இதற்கிடையே, ஐ.நா.வின்
வலியுறுத்தலில் 72 மணிநேரப் போர் நிறுத்தத்துக்கு இசைவு தெரிவித்த இஸ்ரேல் இராணுவமும்,
ஹமாஸ் புரட்சியாளர்களும் அதைப் புறக்கணித்து மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல்
படைவீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு மறைத்து வைத்திருப்பதாகக் கூறி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை
வீரியப்படுத்தியுள்ளது. ஹமாஸ் புரட்சியாளர்களும் இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசி வருகின்றனர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.