ஆக.01,2014. புனித இலொயோலா இஞ்ஞாசியார் விழாவான இவ்வியாழனன்று உரோமையிலுள்ள இயேசு சபையினரின்
தலைமை இல்லத்துக்குச் சென்று மதிய உணவருந்தி, அங்கிருந்த அனைவரோடும் உரையாடி மகிழ்ந்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு சபையைச் சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு
சபையை தோற்றுவித்த புனித இலொயோலா இஞ்ஞாசியார் விழாவன்று, அச்சபையின் தலைமை இல்லம் சென்று,
அவ்வில்லத்தின் உணவு அறையில் அனைவரோடும் சேர்ந்து மதிய உணவருந்தினார். ஓராண்டுக்கு
முன்னர் ஈராக்கில் கடத்தப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர் Paolo Dall'Oglio அவர்களின் ஏழு
சகோதர சகோதரிகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து மதிய உணவருந்தினர். அத்துடன்
அவ்வில்லத்தில் தற்சமயம் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டுவரும் இயேசு சபையின் ஐரோப்பிய
இளம் துறவியரும் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர்.