2014-07-30 15:58:46

புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் மறைந்த கர்தினால் மர்க்கிசானோவுக்கு இறுதி மரியாதை


ஜூலை,30,2014. இத்திங்களன்று இறையடி சேர்ந்த கர்தினால் பிரான்செஸ்கோ மர்க்கிசானோ அவர்களுக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
கர்தினால்கள் அவையின் தலைவர், கர்தினால் ஆஞ்செலொ சொதானோ அவர்கள் நிறைவேற்றிய இத்திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைந்த கர்தினால் மர்க்கிசானோ அவர்களது உடலை அர்ச்சித்து, இறுதி மரியாதை செலுத்தினார்.
மேலும், மும்பை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர்களில் ஒருவரான அக்னேலோ ருபினோ கிரேசியஸ் அவர்கள் பணிஓய்வு பெறவிழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று ஏற்றுக் கொண்டார்.
1939ம் ஆண்டு, ஜூலை 30ம் தேதி பிறந்த கிரேசியஸ் அவர்கள், 1962ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 2001ம் ஆண்டு, ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.