2014-07-29 15:55:35

திருத்தந்தையின் சனவரி திருப்பயணத் தேதிகள் வெளியீடு


ஜூலை,29,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் ஜனவரி 12 முதல் 15 வரை இலங்கையிலும், 15 முதல் 19 வரை பிலிப்பீன்ஸிலும் திருப்பயணம் மேற்கொள்வார் என திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளின் அரசுப் பொறுப்பாளர்களும் ஆயர் பேரவைகளும் விடுத்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நாட்களில் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனக் கூறும் திருப்பீட செய்தித் தொடர்பகம், இப்பயணங்கள் குறித்த முழு விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.