2014-07-28 16:29:59

இந்தியாவில் 30 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்செயல் : ஆய்வு


ஜூலை,28,2014. இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்செயல் இடம்பெறுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் 28 மாநிலங்களில் கடந்த 13 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக மொத்தம் 2,72,844 புகார்கள் பதிவானதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக்கொண்டே வருவதாக காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.