2014-07-26 15:24:03

ஒரு வாரத்தில் மட்டும் நடந்துள்ள மூன்று பயணியர் விமான விபத்துக்கள்


ஜூலை,26,2014. இந்த 2014ம் ஆண்டில் ஒரு வாரத்தில் மட்டும் நடந்துள்ள மூன்று பயணியர் விமான விபத்துக்கள் ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்துக்கள் என்று சொல்லப்படுகின்றது.
மோசமான வானிலையால் சகாரா பாலைவனத்தில் இவ்வியாழனன்று நடந்த அல்ஜிரீய நாட்டு பயணியர் விமான விபத்து, இப்புதனன்று தாய்வானில் நடந்த பயணியர் விமான விபத்து, கடந்த வாரத்தில் உக்ரேய்ன் வான் பகுதியில் நடந்த மலேசிய பயணியர் விமான விபத்து ஆகியவற்றில் 680 பேர் இறந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை கடந்த மூன்றாண்டுகளில் நடந்ததைவிட அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டில் நடந்த விமான பயணியர் விபத்துக்களில் 916 பேர் உயிரிழந்தனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.