இந்தோனேசியாவின் புதிய அரசுத்தலைவரை நம்பிக்கையோடு வரவேற்கின்றது தலத்திருஅவை
ஜூலை,26,2014. இந்தோனேசியாவில் Joko Widodo அவர்கள் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை
மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையோடு வரவேற்பதாக, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரும் ஜகார்த்தா
பேராயருமான Ignatius Suharyo அவர்கள் அறிவித்துள்ளார். புதிய அரசுத்தலைவர் Joko Widodo
அவர்கள் சாதாரண மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்பவர்,
மேலும், அவரது எளிய வழிகளும், காரியங்களைச் செய்வதில் அவரது அணுகுமுறைகளும் நாட்டின்
அரசியல் அமைப்பின் விழுமியங்களோடும், கத்தோலிக்க சமூகப் போதனைகளோடும் ஒத்திணங்கிச் செல்லுகின்றன
என்று பேராயர் Suharyo கூறியுள்ளார். Widodo அவர்கள் மாற மாட்டார் எனத் தான் நம்புவதாகவும்,
அவர் நாட்டை மாற்றுவதற்கு அவர் சரியான மனிதர் என்றும் தெரிவித்த பேராயர், புதிய அரசுத்தலைவர்
அனைவருக்கும் தெரிந்தவர் என்றும் கூறினார். இம்மாதம் 9ம் தேதி நடந்த அரசுத்தலைவர்
தேர்தலில் Joko Widodo அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.