2014-07-21 16:47:13

வாய் புற்றுநோய்க்கு தினமும் இந்தியாவில் 4 பேர் பலி


ஜூலை,21,2014. வாய்ப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு, 6 மணிநேரத்திற்கு ஒருவர் இந்தியாவில் பலியாகி வருவதாக அந்நாட்டின் பல் மருத்துவக் கழகச் செயலர் அசோக் தோப்லே கூறியுள்ளார்.
வாய்ப்புற்றுநோய் பாதிப்பு, கிராமப்புற பகுதி மக்களிடமே அதிகம் உள்ளதால்,. இதுகுறித்த விழிப்புணர்வை, அம்மக்களிடையே ஏற்படுத்தும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறிய மருத்துவர் அசோக் தோப்லே அவர்கள், புகையிலைப் பொருட்களின் பயன்பாடே, வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார்.
வாய் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானவர்களில், வடகிழக்கு மாநிலத்தவர்கள் அதிகம் உள்ளதாகவும் மருத்துவர் தோப்லே அவர்கள் கூறினார்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.