2014-07-21 16:26:58

இராக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறும்படி அச்சுறுத்தல்


ஜூலை,21,2014. ஈராக்கின் மோசூலில் வாழும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியச் சட்டங்களை ஏற்று மதம் மாறவேண்டும், அல்லது நாட்டைவிட்டு வெளியேறவேண்டும், இல்லையெனில் வாளுக்கு இரையாக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது ISIL என்ற அந்நாட்டு புரட்சிக்குழு.
ஈராக்கின் மோசூல் நகரிலுள்ள அனைத்து மசூதிகளின் ஒலிபெருக்கிகள் மூலமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உரைத்த ஈராக் கிறிஸ்தவர்கள், அந்நகரில் கடைசியாக வாழ்ந்து வந்த சில கிறிஸ்தவக் குடும்பங்களும் தற்போது வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மோசூல் நகரிலிருந்து வெளியேறும் கிறிஸ்தவர்களின் உடமைகள் பறிக்கப்படுவதுடன், அவர்களின் வீடுகள் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.