2014-07-21 16:47:26

அரபு ஐக்கிய குடியரசில் இந்தியத் தொழிலாளர்களிடயே தற்கொலைகள் அதிகரிப்பு


ஜூலை,21,2014. அரபு ஐக்கிய நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துவருவதாக துபாயிலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
2007க்கும் 2013க்கும் இடைப்பட்டக் காலத்தில் குறைந்தபட்சம் 700 இந்தியர்கள் அரபுக் குடியரசில் தற்கொலைச் செய்துள்ளதாகக்கூறும் இந்தத் தூதரக அறிக்கை, பொருளாதாரப் பிரச்னைகள், குறிப்பாக கடன்பிரச்னையே இதற்கு முக்கியக் காரணம் எனவும் தெரிவித்துள்ளது. அரபு ஐக்கியக் குடியரசில் இந்தியாவிலிருந்து வேலை தொடர்பாக குடியேறிய 20 இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.