ஜூலை,19,2014. இந்தியாவில் 21 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா.
அறிக்கை ஒன்று அறிவித்துள்ளது. ஐ.நா. வின் எய்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆசிய மற்றும் பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 4 பேர் இந்தியர்கள்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களில்
எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.3 விழுக்காட்டிலிருந்து
2.7 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ்
நோயால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.