ஜூலை 26, Casertaநகருக்கு திருத்தந்தையின் மேய்ப்புப்பணி
பயணம்
ஜூலை,18,2014. ஜூலை 26, அடுத்த சனிக்கிழமை கொண்டாடப்படும் புனிதர்கள் சுவக்கீன், அன்னா
திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியின் Caserta என்ற நகருக்கு மேய்ப்புப்பணி
பயணம் மேற்கொள்வார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி Federico Lombardi
அவர்கள் தெரிவித்தார். Caserta நகரின் பாதுகாவலரான புனித அன்னா அவர்களின் திருநாளன்று,
Giovanni D'Avise மறைமாவட்டத்தின் குருக்களையும் மக்களையும் சந்தித்தபின், மாலை 6 மணியளவில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரில் அமைந்துள்ள அரண்மனைப் பூங்காவில் திருப்பலியாற்றுவார். சனிக்கிழமை
மாலையில் வத்திக்கானுக்குத் திரும்பும் திருத்தந்தை, ஞாயிறு பணிகளை வத்திக்கானில் நிறைவேற்றியபின்,
மீண்டும் ஒருமுறை ஜூலை 28, திங்களன்று Caserta நகரில் பணியாற்றும் Evangelical போதகரும்,
தன் நண்பருமான Giovanni Traettino அவர்களைச் சந்திக்கச் செல்வார். Buenos Aires நகரில்
திருத்தந்தை அவர்கள், பேராயராகப் பணியாற்றியபோது அவருடன் நட்புறவு கொண்டிருந்த போதகர்
Giovanni Traettino அவர்கள், உரோம் நகர் வந்திருந்தபோது விடுத்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை
இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்றும், திங்களன்று நடைபெறும் நிகழ்வுகள் தனிப்பட்ட வகையில்
அமையும் என்றும் அருள்பணி Lombardi அவர்கள் தெரிவித்தார்.