நேர்காணல் – கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த சில தெளிவுகள்
ஜூலை,17,2014. அன்பு நேயர்களே, கடல்சார் ஞாயிறை முன்னிட்டு கடந்த வார நேர்காணலில் நம்
வானொலியில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தூத்துக்குடி மறைமாநில சமூக ஆர்வலர் எக்ஸ்
டி செல்வராஜ் அவர்கள், கச்சத்தீவு விவகாரம் குறித்தும் பேசினார். கச்சத்தீவு இலங்கைக்கு
கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து அது பற்றிய விபரங்கள் அடங்கிய நூலை எழுத்தாளர்
திருமலை அவர்கள், ஜூலை 16 இப்புதன்கிழமையன்று வெளியிட்டுள்ளார். இந்த நூலின் அடிப்படையில்
நமக்கு மேலும் பல விபரங்களைத் தருகிறார் சமூக ஆர்வலர் எக்ஸ் டி செல்வராஜ் அவர்கள்.