2014-07-16 15:53:00

புனித பூமி அமைதி வேண்டி உரோம் நகரில் சிறப்பு செப வழிபாடு


ஜூலை,16,2014. இதற்கிடையே, உரோம் நகரில் செயலாற்றும் காரித்தாஸ் அமைப்பு, இஸ்லாமியர், யூதர்கள் ஆகியோருடன் இணைந்து, புனித பூமியில் அமைதி நிலவும்படி சிறப்பு செப வழிபாட்டினை இச்செவ்வாய் மாலை மேற்கொண்டனர்.
எத்தனை வலுவான சுவர்கள் நம்மை பிரித்தாலும், அன்னை மரியாவின் பரிந்துரையோடு மேற்கொள்ளப்படும் செபமாலைகள், பிரிவுச் சுவர்களைத் தகர்த்துவிடும் என்று இந்த செப முயற்சியை ஏற்பாடு செய்தவர்கள் கூறினர்.
மேலும், கடந்த ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் புனித பூமியில் அமைதி நிலவ செபிக்கும்படி அனைவருக்கும் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, உரோமையத் திருப்பயணங்கள் சேவையின் ஒருங்கிணைப்பாளர், அருள் பணியாளர் Liberio Andreatta அவர்கள், ஜூலை 21, வருகிற திங்களன்று திருப்பயணிகள் குழுவொன்றை புனித பூமிக்கு அழைத்துச் சென்று சிறப்பு செப வழிபாடுகளை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.