இத்தாலியின் பெந்தக்கோஸ்து ஆலயத்துக்குச் செல்ல திருத்தந்தை திட்டம், திருப்பீட செய்தித்
தொடர்பாளர்
ஜூலை,11,2014. இத்தாலியின் கசெர்த்தாவிலுள்ள பெந்தக்கோஸ்து ஒப்புரவு ஆலயத்துக்கு இம்மாத
இறுதி வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வார் என, திருப்பீட செய்தித் தொடர்பாளர்
இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் அறிவித்தார். அர்ஜென்டீனாவின் புவனோஸ்
அய்ரெஸ் நகரைச் சேர்ந்த இந்த பெந்தக்கோஸ்து ஆலயப் போதகர் Giovanni Traettino அவர்கள்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்பதால், இது ஒரு தனிப்பட்ட
பயணமாக இருக்குமெனவும், இப்பயணம், இம்மாதம் 26ம் தேதி இடம்பெறலாம் என்றும் அருள்பணி லொம்பார்தி
அவர்கள் அறிவித்தார். கசெர்த்தா பெந்தக்கோஸ்து போதகர் Traettino அவர்களின் அழைப்பின்பேரில்
அங்கு திருத்தந்தை செல்கிறார் எனவும் கூறினார் திருப்பீட செய்தித் தொடர்பாளர். ஏறக்குறைய
எண்பதாயிரம் மக்களைக் கொண்ட கசெர்த்தா நகரில் பெரும்பாலானோர் கத்தோலிக்கர். இந்நகர் வேளாண்மைக்கும்,
வணிகத்துக்கும், தொழிற்சாலைக்கும் புகழ்பெற்றது.