2014-07-10 15:58:20

பிரித்தானியாவில் சாவதற்கு உதவுதல் என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள சட்டத்தை முறியடிக்கும் முயற்சி


ஜூலை,10,2014. சாவதற்கு உதவுதல் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சட்டவரைவு, ஜூலை 18ம் தேதி பிரித்தானிய பாராளு மன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும் சூழலில், இந்த முயற்சியை எதிர்த்து அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்கள் எழுத வேண்டும் என்று பிரித்தானிய கத்தோலிக்க அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இத்தகைய சட்டம் நடைமுறைக்கு வந்தால், வலுவிழந்த பலரை பிரித்தானிய சமுதாயம் கொன்று விடும் ஆபத்து உள்ளது என்று கத்தோலிக்க ஆயர்கள் கடந்த மாதம் ஒரு அனுப்பியிருந்தனர்.
பாராளு மன்றத்தில் இந்தச் சட்ட வரைவு குறித்து அவசரமான விவாதங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளதென்றும், எனவே, பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு தேவையான தரவுகளை தங்கள் கடிதங்கள் வழியே மக்கள் அனுப்ப வேண்டும் என்றும் பிரித்தானிய கத்தோலிக்க அமைப்பு விண்ணப்பித்துள்ளது.
1967ம் ஆண்டு, கரு கலைத்தலை சட்டமயமாக்கியபோது மனித உயிர்களின் புனிதத்துவம் குலைக்கப்பட்டதுபோல, இந்தப் புதியச் சட்டமும் மனித உயிர்களின் புனிதத்தை வெகுவாக அழித்துவிடும் என்றும் இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.