திருத்தந்தையின் Twitterசெய்தி - உங்களை இறைவனின் கரங்களில்
ஒப்படைக்க அஞ்ச வேண்டாம்
ஜூலை,10,2014. உங்களை இறைவனின் கரங்களில் ஒப்படைக்க அஞ்ச வேண்டாம். அவர் உங்களிடமிருந்து
எதைக் கேட்டாலும், அதற்குப் பதிலாக நூறு மடங்கு திருப்பித் தருவார் என்ற வார்த்தைகளை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 10, இவ்வியாழன் தன் Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார். இறைவனிடம்
கொள்ளவேண்டிய நம்பிக்கை, இறைவனின் சலிப்பற்ற, அரவணைக்கும் அன்பு ஆகியவை திருத்தந்தையின்
Twitter செய்திகளில் அடிக்கடி வெளியாகிவரும் கருத்துக்கள். ஜூலை 10ம் தேதி வெளியான
Twitter செய்தி உட்பட, திருத்தந்தையின் பெயரால் @pontifex என்ற முகவரியிலிருந்து இதுவரை
365 செய்திகள் வெளியாகியுள்ளன என்றும், இன்றைய கணக்குப்படி, திருத்தந்தையின் Twitter
செய்திகளைத் தொடர்வோரின் எண்ணிக்கை 42 இலட்சம் பேர் என்றும் வத்திக்கான் செய்திக்குறிப்பு
கூறுகிறது. அரபு மொழி, ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியம், பிரெஞ்ச், ஜெர்மானியம், ஸ்பானியம்,
போர்த்துகீசியம், போலந்து ஆகிய ஒன்பது மொழிகளில் திருத்தந்தையின் Twitter செய்திகள் மக்களை
ஒவ்வொரு நாளும் சென்றடைந்த வண்ணம் உள்ளன.